கார்த்தியின் 27-வது படமான “மெய்யழகன்” படத்தை இயக்குநர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற 96 படத்துக்குப் பின் நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கியுள்ளார்.
இதன் First Look போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தில் அரவிந்த்சுவாமி, ஸ்ரீ திவ்யா, தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளார். படம் செப்டம்பர் 27 -ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “’நான் போகிறேன்” பாடல் மற்றும் “யாரோ இவன் யாரோ” எனத் தொடங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார். “யாரோ இவன் யாரோ” பாடலை உமா தேவியின் வரியில் கோவிந்த் வசந்தா இசையில் நடிகர் கமல்ஹாசன் குரலில் உருவாகி ரசிக்க வைத்துள்ளது. மேலும் தற்போது நடிகர் kamal haasan பாடிய விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இசையமைப்பாளர் Govind Vasantha – இசைக்குழு முதல் திரை இசை வரை!
இப்பாடல் மிகவும் எமோஷனலாக அமைந்து இருக்கிறது. கமல்ஹாசனின் குரல் இப்பாடலிற்கு உயிரோட்டத்தை தந்துள்ளது. இந்நிலையில் மெய்யழகன் படத்தில் பாடல்கள் பாடிய உலகநாயகன் கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். சூர்யா – ஜோதிகாவின் 2D எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரித்து வெளியிடவுள்ளது.
தனது படங்களில் மட்டுமே பெரும்பாலும் பாடி வந்த kamal இதற்கு முன்பு உல்லாசம் படத்தில் “முத்தே முத்தம்மா” பாடலும், புதுப்பேட்டை படத்தில் “நெருப்பு வாயினில்” பாடலையும் பாடியுள்ளார். தற்போது அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்காகவும் பாடியுள்ளார்.
38-வருடங்களை கடக்கும் Kamal-ன் எதிர்கால படைப்பான விக்ரம் (1986)…
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]